அல்லாஹ்விற்றகாகப் சேர்ந்து அல்லாஹ்விற்காகப் பிரிந்த இரண்டு உறவுகளின் உண்மைச் சம்பவம் (வீடியோ இணைப்பு)
http://www.youtube.com/watch?v=u_Rs6a6jakkசவூதி அரேபியாவைச் சேர்ந்த ஜனாஸாக்களைக் குளிப்பாட்டும் ஒரு ஸேக் தனது அனுபவத்தைப் பகிர்கிறார்.
'ஒரு மையத்து வந்துள்ளது, அவசரமாக வாருங்கள்.' என்று எனக்கு ஒரு அழைப்பு. நானும் அதற்கான ஆயத்தங்களுடன் ஆடைகளை அணிந்து அந்த ஜனாஸா இருக்கும் அரைக்குள் நுழைகிறேன்.
உள்ளே ஒரு வாழிபன், அந்த ஜனாஸாவிற்கு ஒத்த வயதிருக்கும் அங்கு இருப்வர்களையெல்லாம் வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவரது வேகத்தில் என் ஆடை நான்தான் ஜனாஸாவை குளிப்பாட்டுவன் என்று காட்டாவிடின் நானும் வெளியேற்றப்பட்டிருப்பேன்.
அனைவரும் வெளியேறியபின் நான் அந்த வாழிபனை எனக்கு உதவிக்காக அழைத்தேன். அவனும் வந்தான். பின் அந்த இளைஞன் விம்மி விம்மி அழத்தொடங்கினான். 'இவ்வாறு அழுவது நீ இந்த ஜனாஸாவிற்குக் கொடுக்கும் வேதனையாகும். அழாதீர்கள்!!' என்று நானும் ஆறுதல் சொன்னேன். என்றாலும் அழுகை முற்றுப்புள்ளி பெறவில்லை.
பின் நான் அந்த வாழிபனிடம், 'நீ அவனது சகோதரனா? என்று வினவினேன்' அதற்கு அவர், இல்லை எனது சகோதரன், தந்தை என்ற உறவுக்கும் மேல் எங்கள் உறவு என்றார். அப்பொழுதுதான் புரிந்தது. இவர் இந்த ஜனாஸாவின் நண்பன் என்று. உடனே ஆச்சரியத்தில் என் விழிகள் மேலெழுந்தன.
அவ்விளைஞன் தனது உறவைப் பற்றி இவ்வாறு கூறினார். 'நானும் இவரும் சமகாலத்தில் ஒரே பிரதேசத்தில் பிறந்தோம். சிறு வயதிலிருந்தே எனக்கும் இவருக்கும் நெருங்கிய உறவு. இருவருமாக விளையாடுவோம், தொழுகைக்காக பள்ளிக்குச் செல்வோம், பாடசாலைக்கும் ஒன்றாகவே செல்வோம், இருவருமாகவே பல்கலைக்கழகம் நுழைந்து ஒன்றாகவே படித்தோம், ஒன்றாகவே எமக்கு வேலையும் கிடைத்தது, நான் எனது நண்பனுக்கு எனது சகோதரியையும், நண்பன் எனக்கு அவனது சகோதரியையுமாக திருமணம் செய்து கொண்டோம், பின் பக்கத்து பக்கத்திலே எமது வீடுகளையும் அமைத்துக் கொண்டோம். இவ்வாறு எமது உறவு நன்மையான விடயத்திலும், தக்வாவுடைய விடயத்திலும் ஒத்துழைப்பாக இருந்தது. நீங்களே சொல்லுங்கள் எமது உறவைப்போன்று நீர் கண்டிருப்பீரா? அதனால் தான் எனக்கு இவரது பிரிவு கஷ;டமாக இருக்கிறது.'
ஒருவாராக நாம் இந்த ஜனாஸாவை அடக்கம் செய்தோம்.
அடுத்தநாள் மீண்டும் ஒரு அழைப்பு, 'அவசரமாக வாருங்கள் ஜனாஸா ஒன்று வந்திருக்கிறது' நான் சென்று ஜனாஸாவைப் பார்த்தால் எங்கோ கண்ட பழக்கப்பட்ட முகமாக இருந்தது. அப்போது பக்கத்திலிருந்த அந்த ஜனாஸாவின் தந்தையிடம் இது பற்றி வினவ, 'என்ன இவரைத் தெரியாதா? நேற்று இவரது நண்பனின் ஜனாஸாவிடயத்தில் உங்களுக்கு உதவியவர் இவர்தான்.' என்றார்.
அப்போது நாம் அந்த ஜனாஸாவை அவரது நண்பனது ஜனாஸாவுக்குப் பக்கத்திலே அடக்கம் செய்து விட்டு. 'உலகில் இவர்கள் சேர்ந்திருந்தது போன்று, கப்றிலும், சுவனத்திலும் இவர்களை சேர்த்து வைப்பாயாக!!' என்று அல்லாஹ்வைப் பிரார்த்தித்தோம். இருவரது ஜனாஸாவுக்கும் மத்தியில் ஒரு சுவருதான் தடுப்பாக இருந்தது.
பாருங்கள் சகோதரர்களே. இதுதான் அல்லாஹ்விற்காக இணைந்து அல்லாஹ்விற்காக பிரியும் உறவுக்கு உதாரணம். அல்லாஹ்விற்காக நோசம் பாராட்டுவதன் சிறப்பு மகத்தானது. இதற்கு நபியவர்களின் பின்வரும் பென்மொழி சான்றாகும்.
'எனக்காக அன்பு கொண்டவர்கள் எங்கே? உங்களுக்காக நபிமார்களும், ஷஹீத்களும் (எங்களுக்கும் கிடைக்காதா?!! என்று) அங்கலாய்க்கும் அளவு உயர்ந்த ஒளியினாலான மேடைகள் இருக்கிறது.' என்று அல்லாஹுத்தஆலா மறுமையில் தனக்காக நேசம் பாராட்டியவர்களை அழைப்பதாக நபியவர்கள் கூறியதை முஆத் இப்னு ஜபல் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: அத்திர்மிதி:2390)
இவ்வாறாக இணையும் நண்பர்கள், 'நன்மையான விடயத்திலும் தக்வாவுடைய விடயத்திலும் ஒத்துழைப்பாக இருங்கள், பாவகாரியங்களிலும் அத்துமீறல்களிலும் ஒத்துழைப்பாக இருக்காதீர்கள்.' (அல்மாயிதா:2) என்ற ஏவலை சான்றுபகர்கின்றவர்களாக இருப்பார்கள்... இதுவே மேற் சொன்ன சம்பவமும் எமக்கு உணர்த்துகின்றது..
முஆத் முனாஸ் (வரகாபொல)
No comments:
Post a Comment