Thursday, March 17, 2016

ஒற்றைக் கண்ணில் குவியும் முக்கோண அரசியல்: யூதம்|டொன்மே|ஷீஆ

ஒற்றைக் கண்ணில் குவியும் முக்கோண அரசியல்
யூதம்|டொன்மே|ஷீஆ

சமகால உலக நடப்புகளையும், உலக முடிவுக்கால நிகழ்வுகள் குறித்த ஹதீஸ்களையும் ஒப்பீட்டு ரீதியாக அணுகும் போது பல உண்மைகளை காணமுடியுமாக உள்ளது. அந்த அடிப்படையில் இந்த ஆக்கத்தினூடாக ஒற்றைக்கண் அரசியல் எனும் தஜ்ஜாலியத்திற்கான திட்டமிடலோ என்று சந்தேகிக்க முடியுமான ஒரு உண்மை குறித்து அலசுவோம். இன்ஷா அல்லாஹ்.

தஜ்ஜால் எனும் ஒற்றைக் கண்ணையுடையவன் ஈரானின் இஸ்பஹான் என்ற பிரதேசத்திலிருந்து வெளியாகி, ஜெரூசலத்தை மையப்படுத்தி முழு உலகையும் ஆட்சி செய்வான் என்பது ஹதீஸ்களினூடாக விளங்கும் ஓர் உண்மையாகும். இரவு வந்தால் பகல் வருவது எவ்வளவு உண்மையோ அதேபோன்று உண்மையான விடயமாகத்தான் இது தொடர்பான விடயங்களும் ஹதீஸ்களில் இடம்பெற்றிருக்கிறது.

இன்றைய உலக விவகாரங்களை அவதானிக்கும் போது இந்த தஜ்ஜாலிய ஆட்சிக்கான தயார்படுத்தல்கள் முத்திசைகளிலிருந்தும் திட்டமிட்டு நடாத்தப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முதல் திசை: யூதம் (இஸ்ரவேலில்)

யூதம் என்பது பனூ இஸ்ரவேலர்களில் நெறிபுரண்ட ஒரு மதமாகும். இன்று இவர்கள் பலஸ்தீன மன்னில் ஒரு பகுதியை அபகரித்து இஸ்ரேல் என பெயரிட்டு அதனை ஆட்சிசெய்து வருகின்றது. இவர்கள் தல்மூத் மற்றும் கப்பாலா என்ற மாந்திரீகங்களை வேதமாக ஏற்று நடக்கின்றனர்.

இவர்கள் மஸீஹ் எனும் தமது தீர்க்கதரிசியை எதிர்பார்த்தவர்களாக வாழ்கின்றனர். அந்த மஸீஹைக் கொண்டு ஜெரூசலத்தை மையப்படுத்தி முழு உலகையும் ஆட்சிபுரிவதாக சொல்கின்றனர்.

இவர்கள் எதிர்பார்க்கும் மஸீஹின் பண்புகள்:

  • பல்லாண்டுகாலமாக மறைவாக வாழ்ந்து கொண்டிருப்பவர்
  • வாலிபனாக வெளியாகி யூதர்களைக் கொண்டு முழு உலகையும் ஆட்சிபுரிவார்
  • சில பிரதிகளைக் கொண்டுவந்து அல்குர்ஆன் பொய்யானது. இதுதான் உண்மையான வேதம் என்று கூறி மக்களை அவன் பக்கம் அழைப்பான்
  • மரணித்தவர்களை உயிர்பிப்பான்;
  • வரண்ட பிரதேசங்களில் மழை பொழியவைப்பான்
  • புட்பூண்டுகள் வளராத தரையில் அவற்றை முளைபிப்பான்
  • புதையல்களை வெளிப்படுத்துவான்

இன்னும் ஏராளம்...

மேலும் இவர்களது வேதமான தல்மூத் விபச்சாரத்தை அனுமதிக்கிறது. மேலும் இவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேலைகள் தொழுதுவருகிறார்கள் (ஷஹாரீத், மன்ஹா, மஆரீப் என்பனவே அவை). மேலும் தமது இறுதி தீர்கதரிசியான தஜ்ஜால் வந்து ஆட்சிப் பொருப்பை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் வெற்றிகரமாக உலகம் தழுவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறார்கள்.

இரண்டாவது திசை: டொன்மே (துருக்கியில்)

டொன்மே என்பவர்கள் துருக்கியில் வாழ்ந்து வருகின்ற ஒரு யூத பரம்பரையாகும். இவர்கள் செப்டாய் செவி என்ற யூத மதப்போதகரின் வழியில் வந்தவர்கள். துருக்கி கலீபாவால் சிறையில் அடைக்கப்பட்ட இவன் தன்னை பொய்யாக முஸ்லிம் என பிரகடனப்படுத்திக் கொண்டு உள்ளுக்குள் யூதமதத்தைக் கடைபிடித்து வந்தான். இவனது சகாக்களையும் இதே கொள்கையில் வழிநடாத்தினான். தங்களது இறுதி மஸீஹ் வரும் வரை முஸ்லிமாக நடித்து உள்ளுக்குள் யூதத்தை பின்பற்றும் (தகிய்யா) கொள்கையில் நிலைத்திருக்குமாறு வசிய்யத் செய்தான்.

இவர்கள் இன்றுவரை தம்மை இஸ்லாத்தின் காவலர்கள் என்று காட்டிக்கொண்டு இஸ்லாத்தில் சந்தேகங்களையும், தஜ்ஜாலியத்தையும் புகுத்தி மக்களை வழிகெடுத்து பல பிரிவுகளாக பிரித்து அந்தப் பகுதியில் குழப்பம் விளைவிப்பதில் வெற்றிகண்டுள்ளார்கள். இவர்களின் பல இலட்சம் குடும்பங்கள் இன்றும் துருக்கியில் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய கிலாபத்தை உடைத்து துருக்கியை நாசப்படுத்திய முஸ்தபா கமால் பாஷாவும் இந்த சமூகத்தை சார்ந்தவனே.

இவர்கள் யூதர்களின் கொள்கைகளை உடையவர்கள் ஆனால் வெளியில் இஸ்லாமியர்களைப் போன்று காட்டிக்கொண்டு தனிப்பிரிவாக வாழ்ந்து வருகிறார்கள்...

மூன்றாவது திசை: ஷீஆ (ஈரானை மையப்படுத்தி)

ஷீஆ என்பது, அலி (ரழி) அவர்களுக்கே ஆட்சி சொந்தமானது என்று வாதிடும் ஒரு குழுவினர். இவர்கள் பொதுவாக நபி (ஸல்) அவர்களது குடும்பத்தினருக்கே ஆட்சி பொருப்பு சொந்தமானது என்று வாதிடும் குழுவாக அறியப்பட்டிருக்கிறனர். இன்று இவர்கள் ஈரானை மையப்படுத்தி தமது ஷீஆ ஆட்சியை நடாத்துகிறார்கள்.

இவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவனின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு கொள்கையாக மாற்றம் பெற்ற குழுவினர்கள். யூதனான இவன் உஸ்மான் (ரழி) அவர்களது காலத்தில் பொய்யாக இஸ்லாத்தை பிரகடனப்படுத்தி, அஹ்லுல்பைத் என்ற விடயத்தை மையப்படுத்தி இஸ்லாத்தில் புதிதாக இணைந்தவர்களை தன்வசப்படுத்தி முஸ்லிம் உம்மத்தை பிளவுபடுத்தினான்.

படிப்படியாக இவன் இந்த சிந்தனையை ஒரு கொள்கையாக மாற்றியமைத்தான். அவற்றில் சிலது வருமாறு:


  • இமாமிய்யத் - அலி (ரழி) அவர்களின் குடும்பத்திற்கே ஆட்சி சொந்தமானது.
  • அல்குர்ஆன் பொய்யானது. உண்மையான குர்ஆனை மறைந்திருக்கும் கடைசி இமாம் கொண்டுவருவார்.
  • விபச்சாரத்திற்கு முத்ஆ என்று பெயரிட்டு அதனை மார்க்கமாக்கியுள்ளனர்.
  • ஐவேலைத் தொழுகைகளை மூன்று நேரங்களில் தொழுகின்றனர்.
  • இவர்கள் எதிர்பார்க்கும் கடைசி இமாம் மஹ்தி குறித்து:
    • 1200 வருடங்களாக மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
    • வாலிபராக வெளியாகி முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கி வழிநடாத்துவார்.
    • உண்மையான அல்குர்ஆனை கொண்டுவந்து அதனை நோக்கி மக்களை அழைப்பார்.
    • இறந்தவர்களை உயிர்பிக்கும் சக்தியுடையவராக இருப்பார்.

இன்னும் பல...

 இவர்கள் தங்களது இறுதி இமாமை எதிர்பார்த்தவர்களாக இருக்கிறார்கள். இன்று இவர்கள் ஈரானை மைய்யமாக வைத்து தங்களது கொள்கையை உலகம் பூராக பரப்பி வருகிறார்கள்.

இந்த மூன்று தரப்பினரிலும் டொன்மே மற்றும் யூதம் என்பன தெளிவாக தஜ்ஜாலை எதிர்பார்க்கும் தஜ்ஜாலிய கொள்கை வாதிகள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த யூதத் தோடு இன்றைய ஷீஆ மதத்தை ஒப்புநோக்கும் போது சில உண்மைகள் தோன்றும்.

யூதம்


  • பாரசீக பூமியான இஸ்ரேலை மைய்யப்படுத்தி தங்களது ஆட்சியை மேற்கொள்கின்றனர்.
  • அகண்ட இஸ்ரேல் கொள்கை.
  • மூன்று நேரத் தொழுகை
  • விபச்சாரம், நரபலி மற்றும் இரத்தமோட்டல் என்பன மார்க்கத்தில் அனுமதித்தவை.
  • மஸீஹுத் தஜ்ஜாலை இறுதி தீர்க்கதரிசியாக எதிர்பார்க்கின்றனர்.
    • பல்லாண்டுகாலமாக மறைவாக வாழ்ந்து கொண்டிருப்பவன்
    • வாலிபனாக வெளியாகி யூதர்களைக் கொண்டு முழு உலகையும் ஆட்சிபுரிவார்
    • சில பிரதிகளைக் கொண்டுவந்து அல்குர்ஆன் பொய்யானது. இதுதான் உண்மையான வேதம் என்று கூறி மக்களை அதன் பக்கம் அழைப்பான்
    • மரணித்தவர்களை உயிர்பிப்பார்
  • இன்னும் பல...


ஷீஆ


  • பாரசீக பூமியான ஈரானை மைய்யப்படுத்தி தங்களது ஆட்சியை மேற்கொள்கின்றனர்.
  • அகண்ட பாரசீகக் கொள்கை.
  • மூன்று நேரத் தொழுகை (இவர்கள் ஐங்காலத் தொழுகைகளை மூன்று நேரத்திற்கு சேர்த்து தொழுகிறார்கள்)
  • விபச்சாரம், நரபலி மற்றும் இரத்தமோட்டல் என்பன மார்க்கத்தில் அனுமதித்தவை.
  • இமாம் மஹ்தியை தங்களது இறுதி இமாமாக எதிர்பார்க்கின்றனர்.
    • 1200 வருடங்களாக மறைவாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
    • வாலிபராக வெளியாகி முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கி வழிநடாத்துவார்.
    • உண்மையான அல்குர்ஆனை கொண்டுவந்து அதனை நோக்கி மக்களை அழைப்பார்.
    • மரணித்தவர்களை உயிர்பிப்பார்
  • இன்னும் பல...


இந்த சுருக்கமான ஒப்பீட்டுடன் பின்வரும் ஹதீஸ்களை விளங்க முயற்சிப்போம்.

'தஜ்ஜால் ஈரானிலுள்ள (இன்றைய்ய ஷீயா நாடு) இஸ்பஹானிலிருந்து வெளிவருவான். அவனுடன் 70,000 பாரசீக யூதர்கள் சேர்ந்துகொள்வார்கள். அவர்கள் அனைவரும் ஈரானிய சால்வை (உடை) அணிந்திருப்பார்கள்.' (முஸ்லிம்:7043)

இந்த நபிமொழியுடன் மேலுள்ள ஒப்பீட்டை அவதானிக்கும் போது பலத்த சந்தேகம் ஒன்று தோன்றுகிறது. இப்னு ஸபா என்ற யூதனால் உருவாக்கப்பட்ட கொள்கை யூதம் சார்ந்த கொள்கையாகத்தானே இருக்க வேண்டும். ஷீயாக்கள் தங்களது கடைசி இமாமை எதிர்பார்க்கின்ற போது அதே பண்புகளைக் கொண்ட தஜ்ஜால் அந்த ஊரிலிருந்து வெளிப்படுவான். அப்போது இப்னு ஸபாவிற்கு ஏமாந்தது போன்று கொடிய தஜ்ஜாலை ஈமான் கொள்ளக் கூடும். பின் அந்த ஷீயாக்களை தமது படையினராக எடுத்துக் கொண்டு இஸ்ரவேலை மையமாகக் கொண்டு முழு உலகிற்குமான  தனது ஆட்சியை பிரகடனப்படுத்துவான்.

ஷீஆ கொள்கையை வடிவமைத்த யூதனான இப்னு ஸபா தனது தஜ்ஜாலை ஆதரிக்கும் கூட்டமாக அவர்களது கொள்கையை வகுத்திருப்பது ஆச்சரியமானதல்ல. அதுவும் தஜ்ஜால் வெளிப்படும் அதே பூமியில் நிலைகொள்ளச் செய்திருப்பதும் ஆச்சரியமல்ல. ஆக ஹதீஸில் வரும் ஈரானிய சால்வை (உடை) அணிந்த 70,000 பாரசீக யூதர்கள் இந்த ஷீஆக்களாக இருக்கலாம். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.!

மேலும் நபியவர்கள் சொன்னார்கள், 'கப்ருடைய விசாரனை எவ்வளவு உண்மையோ அதே போன்று தஜ்ஜால் ஒவ்வொருவரிடமும் வருவது நிச்சயமாகும்.' (முஸ்லிம்)

நபியவர்கள் காலம் தொட்டு இன்றுவரை தஜ்ஜாலியத் ஒவ்வொருவரது வீட்டுக் கதவையும் தட்டியிருக்கிறது, தட்டிக்கொண்டிருக்கிறது. அது எந்த வடிவிலாக இருந்தாலும் சரியே. இதனை வரலாறும் சமகால நிகழ்வுகளும் கோடிட்டுக் காட்டுகிறது. ஷீஆ என்ற மதம் இன்று எங்கள் ஒவ்வொருவரது வீட்டுக் கதவையும் தட்டி எமது ஈமானுக்கு சோதனையாக மாறிவருகிறது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், '(தஜ்ஜாலாகிய) அவன் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கிடையே வெளிப்படுவான். வலப்புறமும், இடப்புறமும் குழப்பத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ்வின் அடியார்களே! உறுதியாக இருங்கள்.'
இன்று இந்த பகுதிகளில் ஷீஆக்களினூடாக பெரும் குழப்பம் நிகழ்ந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்த உண்மையே.

மேலும் நபி (ஸல்) அவாகள் கூறினார்கள், 'தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையே 'காபிர்' என்று எழுதப்பட்டிருக்கும். அவனது செயற்பாடுகளை வெறுப்பவர்கள் அதனைப் படிப்பார்கள்.' (திர்மிதி:2337) இன்னோரிடத்தில் முஃமின்களுக்கு மாத்திரமே இது விளங்கும் என்றுள்ளது.

தஜ்ஜாலியத்தை வெறுத்து ஈமானில் உறுதியாக இருப்பவர்களுக்கு மாதிரம்தான் காபிர் என்று முத்திரை குத்தப்பட்ட தஜ்ஜாலியத் தெளிவாக விளங்கும். ஆக ஈமானில் பலவீனப்பட்டவர்கள் உலக ஆசைகளுக்கும், இச்சைகளுக்கும் அடிமைப்பட்டு அதனை ஆதரித்து வாழும் மனிதர்களுக்கு இவனது நிராகரிப்பு விளங்காமல், அவனை உண்மையானவன் என்று நம்பி பின்பற்றுவர். (இன்று ஷீஆக் கொள்கைக்கும் ஈமானில் பலவீனப்பட்டு உலக ஆசைகளுக்கும், இச்சைகளுக்கும் அடிமைப்பட்டு அதனை ஆதரித்து வாழும் மனிதர்களே மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த உண்மை)




ஷீஆக்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளைக் காட்டும் போடோக்கள்.....
 
 


 

 















யூதர்களுடன் ஒன்றிப்போகும் இவர்களது சில இபாதத்கள்...

 


குறிப்பு: இவர்களுக்கு மத்தியிலுள்ள இரகசியக் காதல் குறித்த ஏராளமான தகவள்கள் கசிந்துள்ளன... இவை குறித்து ஏராளமான ஆக்கங்களும் வெளியாகியுள்ளன...

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அல்லாஹ் எம் அனைவரையும் தஜ்ஜாலின் கொடுதியில் இருந்து காப்பாற்றி ஈமானில் உறுதியாய் இருக்க அருள் புரிய வேண்டும்...




வரகாபொலை முஆத் முனாஸ்
மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகம்

No comments:

Post a Comment