Saturday, May 7, 2016

நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா? நன்றி செலுத்துங்கள்.

நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா?
நன்றி செலுத்துங்கள்.



  • வாழ்க்க வெறுத்துட்டு...
  • எனக்கு மட்டும் இப்பிடி...
  • அல்லாஹ் என்ன மட்டும்தான் சோதிக்கிரான்...
  • நான் குடுத்து வெச்சவனல்ல...
  • ஏண்ட பொறப்பு சரியில்ல...
  • எனக்கு ஒன்டுமே இல்ல...


இந்த வர்த்தைகளைத்தான் எம் உள்ளங்கள் அடிக்கடி மீட்டுகிறது. ஏன்?
இப்படிப்பட்ட நிலமைக்குக் காரணம்தான் என்ன?

சற்று சிந்தியுங்கள்...

?????????????????????????????
?????????????????????????????

பதில் கிடைத்து விட்டதா???
இல்லாவிட்டால் விடுங்கள்..!! படைத்தவனே பதில் தருகிறான்..!!
நான்றாகக் பதித்துக்கொள்ளுங்கள்...!!!!

நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்.” (அல்குர்ஆன் 14:7)

அல்லாஹ் எமக்கு வழங்கியிருக்கும் அருள் குறித்து சிந்தித்ததுண்டா..? இல்லை..!!

“உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?” (அல்குர்ஆன் 51:21)

ஆனால் நாமோ? பிறருக்கு வழங்கப்பட்ட அருள் குறித்து சிந்திக்கிறோம்... இனி எங்கே நிம்மதி கிடைக்கும்..?

நபியின் வழிகாட்டல் ஞாபகம் இல்லையா?

நீங்கள் உங்களுக்கு மேலுள்ளவர்களைப் பார்க்காது, கீழுள்ளவர்களைப் பாருங்கள்..”

ஆனால் எம் கண்களுக்கு கீழுள்ளவர்கள் காண்பதில்லையே..!! ஒருவேளை அவர்கள் எமக்குக் கீழால் இருப்பதாலோ…??!!

இல்லை, இல்லை..!! ஒரே ஒரு கேள்வி...!!

எனக்கு ஒரு விடயம் வாக்களிக்கப்பட்டிருக்கிறதுஇன்னுமொரு விடயம் வாக்களிக்கப்பட வில்லை,, இதில் எதுகுறித்து கவலைப்படவேண்டும்...???
பதில்... (வாக்களிக்கப்படாததுதான்..)

ஆனால் நாம் வாக்களித்த விடயம் குறித்துதான் கவலைப்படுகிறோம்...

வாக்களிக்கப்பட்டதா..?? அதுக்கு ஏன் கவளப்படனும்..??

இறுதி வேதத்தில் நம்பிக்கை இருந்தால் சிந்திப்போம் இந்த வசனம் குறித்து...

“இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.” (அல்குர்ஆன் 11:6)

இனியுமா கவலை...???!!

மறுமையில் எனக்கு வர இருக்கும் கூலிகள் இன்னும் நிர்னயிக்கப்படவில்லை... எனவே அது குறித்து கவலைப்படுவோம்.. அதற்காக பாடுபடுவோம்...

இதற்காக  எமக்கு கிடைத்திருக்கும் அருள்களுக்கு நன்றி சொலுத்துவோம்... எழுதியது கிடைத்தே தீரும்... எழுதப்படாதவையும் அதிகரிக்கும்... இறை வாக்கு அப்படித்தானே...

நன்றி செலுத்துவதற்கு மாற்றமாக, நன்றிகெட்டவனாக இருந்தாலும் எழுதியது கிடைத்தே தீரும்... ஆனால் நிம்மதி இருக்காது... அதேநேரம் எழுதப்படாத மறுமை வாழ்க்கையிலும் நிம்மதியிருக்காது... (அருள்களை நிராகரித்துவிட்டு சுவனத்தை கற்பனை பன்னமுடியுமா...!!!)

“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).” (அல்குர்ஆன் 14:7)

இதை அறிந்த பிறகும் நாம்... நன்றி மறப்போமா..???!!

“நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 100:6)

யா அல்லாஹ்..!! உனக்கு நன்றி செலுத்தும் அந்த சொற்ப எண்ணிக்கையினரில் என்னையும் ஒருவனாக்கு...!!!

நன்றி செலுத்துவது எப்படி..???

யாராவது எமக்கு எதனையாவது தந்து உதவி செய்தால் எப்படி நன்றி செலுத்துவோம்..?? அவர் செல்வதை தாமதிக்காமல் செய்யத் துணிவோம்..

ஆம், இதுதான் நன்றி..!!

  • இறைவன் சொன்னதை செய்யுங்கள், சொல்லாததை விட்டுவிடுங்கள்..
  • தடுத்ததை தவிர்ந்திருங்கள், அனுமதித்ததை அனுபவியுங்கள்..
  • வரம்புமீறாதீர்கள்... அவனுக்காக வாழுங்கள்...!!!


எண்ணிமுடிக்க முடியாத அருள்களைத் தந்தவனல்லவா அவன்..??!!

“இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணிமுடிக்க முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 16:18)

நன்றி செலுத்துவோம்ஈருல நிம்மதி பெறுவோம்...!!!!!!!



வரகாபொலை முஆத் முனாஸ்

No comments:

Post a Comment