Tuesday, July 9, 2013

ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல்

ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல்

அல்லாஹ் தஆலா தனது திருமறையிலே பின்வருமாறு கூறுகின்றான்: நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய செல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கும் நீங்கள் தீங்கிழைத்துவிட்டு பின்னர் நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும். (அல்ஹுஜுராத் 49:6)


இவ்வசனம் இடம் பெற்றிருக்கும் அல் ஹுஜுராத் அத்தியாயம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறங்கிய ஒழுக்க போதனைகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு இறைவிசுவாசிக்கு அவசியம் இருக்க வேண்டிய குணநலன்களைக் கற்றுத் தருவது இந்த அத்தியாயத்தின் கருப்பொருளாகக் காணப்படுகிறது. இப்போதனைகள் மதீனாவில் ஒரு கட்டுக் கோப்பான இஸ்லாமிய சமூகம் உருவாக்கப்பட்டதன் பின்னர் இறக்கப்பட்டன. அந்த சமூகத்தில் காணப்பட்ட ஜாஹிலிய்யாக் கால பண்புகளை மாற்றுவிக்க இவ்வத்தியாயத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் முனைகின்றன. அந்த அடிப்படையில் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள வசனம் சமூகத்தில் பிரட்சினைகள் உருவாவதற்கு உருதுணையாக இருக்கும் வதந்திகள் சம்பந்தமாக பேசுகின்றது.

இன்று பலவிதமான வதந்திகள் பரவியிருக்கின்றதையும் அதனைக் கட்டவிழ்த்திடும் நபர்களையும் நாம் பரவலாக எமது சமூகத்திலே கான்கிறோம். ஆதலால் வதந்திகளின் பாரதூரம், அதைப்பற்றி அல்குர்ஆனும் சுன்னாவும் கூறுவது என்ன? என்பவற்றை அறிந்திருப்பது காலத்தின் தேவை என்று கருதி இந்த முயற்சியை மேற்கௌ;கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

மேறுகூறிய இறைவசனத்தில் ஒரு செய்தி எம்மிடம் வந்தால் அதனைக் நாம் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை தெளிவாக கூறுகின்றதைக் கானலாம். எவ்வாறெனில்.

யாராவது ஒருவர் ஏதாவது ஒரு செய்தியை எம்மிடம் கொண்டுவந்தால்.
1. அது உண்மையா என்று அறியும் பொருட்டு தீரவிசாரிக்க வேண்டும்.
2. இவ்வாறு விசாரித்தறியாமல் அதை மக்களுக்கு அறிவித்தால் இதனால் மக்கள் தீங்கிழைக்கப்படுவார்கள்.
3. இவ்வாறு செய்வது உங்களுக்கே மேசமாகவும் அமையும்.
இந்த அல்குர்ஆனின் உபதேசத்தோடு பின்வரும் நபிமொழிகளையும் நாம் உரசிப்பார்க்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பெய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.' (முஸ்லிம் தமிழாக்கம், பாகம் 1, ஹதீஸ்:06)

இதனுடைய விளக்கம் என்னவெனில்: ஒருவர் கேள்விப்படும் தகவல்களில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். இந்நிலையில், தமது காதில் விழுந்த செய்திகள் அனைத்தையும் ஒருவர் மற்றவருக்குச் சொல்வதென்பது பொய் பரவுவதற்கு துணைபோவதாகவே அமையும். ஆகவே உண்மையா, பொய்யா என்பதை நன்கு பரிசீலித்து பின்னரே தாம் கேள்விப்பட்ட தகவலை ஒருவர் அடுத்தவரிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், அவரும் பொய்யராகவே கருதப்படுவார். (அல்மின்ஹாஜ்)

மேலும் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றதாக: ஷைத்தான் மனித வேடத்தில் செயலாற்றுகின்றான். அவன் மக்களிடம் வந்து பொய்ச் செய்திகளை எடுத்துரைக்கின்றான். பிறகு மக்கள் கலைந்து சென்றுவிடுகின்றனர். (அதாவது சபை முடிந்துவிடுகின்றர். மக்கள் கலைந்து சென்றுவிடுகின்றனர்) அப்போது அவர்களில் ஒருவன் „நான் இந்த விஷயத்தை ஒரு மனிதனிடமிருந்து செவியுற்றேன். அவனது முகம் எனக்குத் தெரியும். ஆனால், பெயர் மட்டும் தெரியாது‟ என்று கூறுவான். (முஸ்லிம்)

விளக்கம் : இந்த நபிமொழியில், எந்த விஷயத்தையும் ஆராயாமல் செய்வதை விட்டுத் தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அந்த விஷயத்தை சொன்னவன் பொய்யனாகவும் ஷைத்தானாகவும் இருக்கலாம். மக்கள் கூட்டத்தின் முன் தான் கேள்விப்பட்ட விஷயங்களையெல்லாம் எடுத்துச் சொல்லும் வழக்கம் உண்மையாகிவிட்டால், அதனால் பேரிழப்புகள் உண்டாகக் கூடிய கஷ்டங்களும் நஷ்டங்களும் ஏற்படக்கூடும். எனவே, செய்தி விடுப்பவனைக் குறித்து இந்த மனிதன் எப்படிப்பட்;டவன் என்று புலானாய்வு செய்யுங்கள். அவன் பொய்யன் என்பது உறுதியாகிவிட்;டால், அவனது பேச்சை நிராகரித்து விடுங்கள்.

அப்துல்லாஹ் பின் வஹப் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், 'தெரிந்துகொள்! கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் ஒரு மனிதர் (பொய்யிலிருந்து) தப்பமாட்டார்ளூ கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் ஒருவர் ஒருபோதும் (வழிகாட்டும்) தலைவராக இருக்கமாட்டார்' என்று கூறினார்கள். (முஸ்லிம் தமிழாக்கம், பாகம் 1, ஹதீஸ்:08)

அப்தூரஹ்மான் பின் மஹ்தி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தாம் கேள்விப்பட்டவற்றில் (சந்தேகத்திற்குரிய) சிலவற்றையாவது (பிறருக்குத்) தெரிவிப்பதிலிருந்து வாய்மூடாதவரை அவர் பின்பற்றப்படும் தலைவராக ஆகமுடியாது.
இதை முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் தமிழாக்கம், பாகம் 1, ஹதீஸ்:10)
சுஃப்யான் பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இயாஸ் பின் முஆவியா (ரஹ்) அவர்கள், 'குர்ஆனை கற்பதில் உங்களுக்கிருக்கும் ஈடுபாட்டை நான் அறிவேன். எனவே, குர்ஆனிலுள்ள ஓர் அத்தியாயத்தை எனக்கு ஓதிக்காட்டி விளக்கமளிப்பீராக! நீங்கள் கற்றதை நான் சரி பார்க்க வேண்டும்' என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். அப்போது அவர்கள் என்னிடம், 'நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். அதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்ளூ நிராகரிக்கப்பட்ட செய்திகளை கூற வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அச்செய்திகளை கூறித் திரிகின்றவர் இழிவடையாமலும் பொய்யர் என இனங் காணப்படாமலும் இருத்தல் அரிது' என்றார்கள். (முஸ்லிம் தமிழாக்கம், பாகம் 1, ஹதீஸ்:11)
இவை அனைத்தையும் உற்றுநொக்கும் போது ஏதாவது ஒரு செய்தி எம்மிடம் வந்தால் அதை சம்பந்தப்பட்டவர்களிடம் வினவி தீரவிசாரிக்காது மக்களிடம் பரப்புவது பெய்யர்களாகும், மேலும் அத்தகையவர்கள் மனிதர்களை வழிநடத்துவதற்கு அருகதையற்றவர்கள் என்பவற்றை எமக்கு உனர்ந்து கொள்ள முடியும்.
பேய்யைப் பற்றியும் அதன் விபரீதங்கள் பற்றியும் நாம் நன்கு அறிந்தே வைத்திருக்கிறோம். என்றாலும் அதைப்பற்றிய ஒரு சில அறிவிப்புகளை பார்ப்போம்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
„பொய் சொல்வது எந்த நிலையிலும் அனுமதிக்கப்பட்டதல்ல, உண்மையாக (வேண்டுமொன்றே வினையாக) சொன்னாலும் சரி, விளையாட்டுக்காகச் சொன்னாலும் சரி, இரண்டுமே கூடாது. உங்களில் எவரேனும் தம் குழந்தைக்கு ஏதேனும் ஒரு பொருள் கொடுப்பதாக வாக்களித்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் விடுவதும் அனுமதிக்கப்பட்டதல்ல!‟ (அல் அதபுல் முஃப்ரத், பக்கம் 58)
அறிவிப்பாளர் : பஹ்ஸ் பின் ஹகீம் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: „மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகட்டும்! அவனுக்கு அழிவு காத்திருக்கிறது.‟ (திர்மிதி)
விளக்கம் : பேசிக்கொண்டே இருக்கும்போது பொய்யைக் கலந்து, உரையாடலை காரசாரமாகவும் சுவைமிக்கதாகவும் ஆக்கி, அவையில் கலகலப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திடப் பொய்யுரைப்பது தவறாகும் என இந்த நபிமொழியில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: „தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியமால் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுவதாயினும் - பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத் தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேள்.‟ (அபூதாவூத்)

இவற்றைப் பார்க்கும் போது விளங்கும் விளையாட்டுக்குக் கூட பெய்பேசுவது கூடாத ஒரு விடயம் என்பது. குர்ஆன் இதனைக் கூறும் போது 'பொய் பேசுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்' (திருக்குர்ஆன் 22:30) என்று கூறுகிறது. மேலும் தூதர் (ஸல்) அவர்கள் பெய்யைத் தவிர்ந்து இருப்பவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டைக் பெற்றுத் தருவதற்கு தான் பொறுப்பு என்று வாக்களித்திருக்கிறார்கள்.

சிந்தியுங்கள் சகோதரர்களே நாம் பெய்யாக சோடித்து சொல்லும் செய்திகள் அல்லது யாரவது எங்களிடம் சோடித்து சொன்னவைகளை நாம் தீரவிசரித்து அறியாமல் அதை மக்களிடையே பரப்புவதால் மனிதர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். அதே நேரம் இவ்வாறு வதந்திகளைக் கட்டவழ்த்து விடுபவர்கள் இரண்டு தீமைகளை அடைந்து கொள்கின்றார்கள்.
1. பொய் எனும் பாவத்தை செய்கின்றார்கள்.
2. சமூகத்திலே குழப்பத்தை உண்டுபன்னுகிறார்ள்.

இவை இரண்டையும் அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்றிருந்தால் அவன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் மன்னிப்பை பெற்றுக்கொள் வேண்டும். அப்பொழுது தான் அல்லாஹ் அவனை மன்னிப்பான். அதேனேரம் சகோதரர்களே! அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பாதவதை ஒருவன் பரிபூரண ஈமான் கொண்டவராக முடியாது.' இந்த அறிவிப்பிற்கு இனங்க நாம் துன்பத்திலும், கவலையிலும் நாம் விழுவதை ஒருபோதும் விரும்பமாட்டோம். அதேபோன்று எமது சகோதரர்களுக்கும் இதையே விரும்பி துன்பம் மற்றும் கவலைகளிலிருந்து அவர்களையும் காப்பாற்றுபவர்களாக இருந்தால் தான் நாம் ஈமானிலே பரிபூரணமடைய முடியும்.

ஆகவே சகோதரர்களே இவ்வளவு பாரதூரமான இந்த வதந்திகளைப் பரப்பும் காரியத்திலிருந்து தவிர்ந்து சமூக கட்டமைப்பில் பங்கம் விளைவிக்கும் நபர்களிலிருந்து ஒதுங்கி விலகி அதனை வளர்க்கும் உரங்களாக எம்மை மாற்றி சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களாக எம்மை மாற்றிக்கொள்ள முயற்சிப்போம்.


எம்.எம். முஆத்
(இஸ்லாஹிய்யா வளாகம்-மாதம்பை)
E-Mail: muaadh.munas07@gmail.com

No comments:

Post a Comment