Saturday, September 7, 2013

மீண்டும் ஒரு சிங்கள-முஸ்லிம் கலவரம் வெடித்துவிடுமோ என பெரிதும் அஞ்சினேன்! - விக்டர் ஐவன்


மீண்டும் ஒரு சிங்கள-முஸ்லிம் கலவரம் வெடித்துவிடுமோ என பெரிதும் அஞ்சினேன்! - விக்டர் ஐவன் 

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளினால் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக, மீண்டும் ஒரு சிங்கள முஸ்லிம் இனக் கலவரம் வெடித்து விடுமோ என தான் பெரிதும் அஞ்சியதாக 'ராவய' பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் பிரபல எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான விக்டர் ஐவன் விடிவெள்ளிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது குறிப்பிட்டார்.
அவருடனான விரிவான நேர்காணல் வருமாறு:


நேர்­காணல்: எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத்


இந்நாட்டில் வாழுகின்ற மக்களை இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டின் கீழ் கொண்டுவர முடி யாதிருப்பதற்கான காரணம் என்ன எனக் கருதுகிறீர்கள்?


ஒரு சமூகம் எனப்­படும் போது பல இனங்கள், மதங்கள், மொழிகள் கலந்து காணப்­படும். அதற்­குள்ளே முஸ்லிம் தன்மை, சிங்­க­ளத்­தன்மை, தமிழ்த் தன்மை என கலந்த தன்மை காணப்­படும். அவ்வாறானதொரு சூழலில் ஒவ்­வொ­ரு­வரும் இணைந்து வாழ வேண்டும். எனது தனிப்­பட்ட கருத்து ஒரு இனத்தை விட இன்­னொரு இனம் உயர்ந்­ததோ தாழ்ந்­ததோ அல்ல.

எமக்­கி­டையில் ஒற்­று­மையை உரு­வாக்கிக் கொள்­வதில் ஒரு பிரச்­சினை இருக்­கின்­றது. இதற்கு எமது சிங்­கள, முஸ்லிம் தமிழ் தலை­வர்கள் அனை­வரும் பொறுப்புக் கூற வேண்டும். ஒரு தடவை முஸ்லிம் தலை­வர்­களுள் ஒரு­வ­ரான அஷ்ரப் என்­னோடு கதைத்தார். தனது கட்­சிக்கு முஸ்லிம் காங்­கிரஸ் என்று பெய­ரிட்­டது தவறு என்று கூறினார். அவர் மர­ணிக்க ஒரு வாரத்­துக்கு முன்­னரே இந்த விட­யத்தை என்­னிடம் கூறினார்.

1948 ஆம் ஆண்டு நாம் சுதந்­தி­ரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பெரிய கஷ்­டங்­களை அனு­ப­விக்கவில்லை.­ இந்­தியா பல கஷ்­டங்­களை அனு­ப­வித்­துதான் சுதந்­தி­ரத்தைப் பெற்றுக் கொண்­டது. அதற்­காக வேண்டி அனை­வ­ரையும் ஒன்று சேர்க்க வேண்­டிய தேவை­யி­ருந்­தது.

மகாத்மா காந்தி போன்ற சிறந்த தலை­வர்கள் அங்கு இனங்­க­ளுக்­கி­டையில் ஒரு­மைப்­பாட்டை ஏற்­ப­டுத்த எத்­த­னிப்­புக்­களை செய்­தனர். இவ்­வா­றான தலை­வர்கள் நமக்­கி­ருக்­க­வில்லை. பிரித்­தா­னி­யரை அல்­லது ஆங்­கிலே­யரை ஏமாற்றி இந்த நாட்டின் சுதந்­தி­ரத்தை பெற முயற்­சித்­தனர். சுதந்­தி­ரத்தை பேணும்­போது ஒரு பொது­வான உடன்­பாடு இருக்­க­வில்லை. இலங்­கையர் என்ற இனத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் நிலை இருக்­க­வில்லை.

அதன் தாக்­கத்தை நாம் இன்னும் அனு­ப­வித்துக் கொண்டே இருக்­கின்றோம். எமது எந்தத் தலை­வரும் எந்­த­வித வேறு­பா­டு­மின்றி நாம் ஒன்­றி­ணைவோம் என்று சொல்­வ­தில்லை. இந்த நாட்டில் அனை­வ­ருக்கும் சம உரி­மை­யு­டைய ஒரு­வரை ஒருவர் மதிக்­கின்ற ஒரு சமூ­கத்தை உரு­வாக்க யாரும் முயற்சி செய்­த­தில்லை. எல்­லோ­ருமே இன்­னொரு இனத்­துடன் குரோ­தத்தை தூண்டும் வகை­யி­லேயே செயற்­ப­டு­கின்­றனர். இது மிகவும் பயங்­க­ர­மா­னது. சிங்­கள தமிழ் சமூ­கத்துக்கு மத்­தியில் பல தசாப்­த­மாக தொடர்ந்த யுத்தம் ஓய்ந்­துள்ள நிலையில் இன்­னொரு சிறு­பான்மை சமூ­கத்­துடன் முரண்­ப­டு­வது மிகப் பயங்­க­ர­மான தவ­றான விட­ய­மாகும்.


இந்த நிலைமைகளுக்கு ஒட்டுமொத்த பெரும் பான் மையினரும் மௌன அங்கீகாரம் வழங்குகின் றனர் எனக் கருத இடமுண்டா?


இல்லை. இந்த நிலைமையை பெரும்­பான்மை சமூகம் அனு­ம­திப்­ப­தாக எனக்கு தோன்­ற­வில்லை, பெரும்­பான்மை சமூகம் அமை­தி­யா­கத்தான் இருக்­கின்­றது. தீவி­ர­வாதப் போக்­கு­டைய கடும்­போக்­கு­டைய நூறு இரு­நூறு பேர் இணைந்து மிகப் பெரிய குழப்­பத்தை உண்டு பண்ண முடியும். சில நேரங்­களில் நல்ல விட­யங்­களை சிந்­திக்­கின்ற பார்க்­கின்ற அமைப்­பு­களால் ஒன்­றி­ணைய முடி­யாமல் இருக்கும். ஆனால் இவ்­வா­றான கடும்­போக்கு சக்­திகள் இல­கு­வாக நிறு­வ­ன­ம­ய­மா­கி­விடும்.

இன்று மக்கள் இவ்­வா­றான நிகழ்­வு­க­ளூ­டாக கற்றுக் கொண்­டி­ருக்­கின்­றனர். இவ்­வா­றான விட­யங்­களை மக்கள் அனு­ம­திக்­கின்­றனர் என்று எனக்குத் தோன்­ற­வில்லை. நான் குறித்த ஒரு இனத்தைச் சாட­வில்லை. எல்லா இனத்­த­வரும் பொறுப்­புடன் மிகவும் நுணுக்­க­மான முறையில் இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வைத் தேட வேண்டும்.

இவை போதனை செய்து தீர்­வு­கா­ணக்­கூ­டிய பிரச்­சி­னை­யல்ல. நான் நினைக்­கின்றேன் ஒரு புதிய சமூக கோணம், புதிய அரச தலைவர், புதிய அர­சியல் பண்­பாடு என்­பன உரு­வாக வேண்டும். இது சிங்­கள, முஸ்லிம்,தமிழ் இனங்கள் இணைந்த புதிய கோணத்தில் சிந்­தித்து நாம் அனை­வரும் ஒரு நாட்­டவர் என்ற எண்­ணத்­துடன் அனை­வ­ருக்கும் எல்லா உரி­மை­களும் உள்­ளன என்ற எண்­ணத்­துடன் செயற்­பட வேண்டும்.

நாம் எப்­போது வந்­த­வர்கள், புதி­ய­வர்­களா? பழை­ய­வர்­களா? என்­பதில் எந்தப் பய­னு­மில்லை. இங்கு பிறந்­த­வர்கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வாழ்ந்­த­வர்கள். முஸ்­லிம்கள் ஒரு காலத்தில் வெளி­நாட்டில் இருந்து வந்­த­வர்கள். அவர்கள் இங்­குள்ள பெண்­க­ளையே மணந்து கொண்­டனர்.

சிங்­க­ள­வர்கள் இந்­நாட்­டுக்கு வர முன்னர் குவேனி என்ற ஒருவர் இங்கு வசித்தார். அறி­வு­பூர்­வ­மாக பார்த்தால் வர­லாற்றை மையப்­ப­டுத்தி கதைப்­பது மிகவும் மடத்­த­ன­மான விட­ய­மாகும்.


நமது நாட்டில் இனங்களுக்கிடையே முரண் பாடுகளும் கருத்துவேறுபாடுகளும் தோற்றம் பெறும் போது ஊடகங்கள் அதற்கு எண்ணை வார்த்தன எனும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியுமா?


எனது பார்­வையில் சிங்­கள ஊட­கங்கள் சிங்­களக் கோணத்­திலும் முஸ்லிம் ஊட­கங்கள் முஸ்லிம் கோணத்­திலும் தமிழ் ஊட­கங்கள் தமிழ் கோணத்­தி­லே­யுமே பிரச்சினகளைப் பார்க்­கின்­றன. இதன் அர்த்தம் என்­ன­வென்றால் எமக்­கான ஒரு பொதுப் பார்வை இல்லை என்­ப­தாகும்.

நான் வலியுறுத்தும் ஒரு­வி­டயம் தான் இந்தப் பிரச்­சி­னைக்கு மூல­கா­ரணம் ஊட­கங்கள்தான். வேறு நாடு­களில் என்றால் இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் ஊட­கங்கள் மிகக் கவ­ன­மாக செயற்­படும். இன­வாதம், வர்க்க வாதம், குழு­வாதம் போன்ற விட­யங்­களுக்கு ஊட­கங்கள் முன்­னு­ரிமை கொடுக்­காது. ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக எமது ஊட­கங்­க­ளுக்கு இந்தப் பண்பு இல்லை. இந்தப் பண்­பில்­லாமல் போவ­தற்கு காரணம் நாம் ஒன்­றி­ணைந்த சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் மனோ­பாவம் கொண்ட ஒரு சமூ­க­மல்ல. நான் தனிப்­பட்ட ரீதியில் நினைக்கும் ஒரு விட­யம்தான் நாம் மிகப் பெரிய பிரச்­சி­னையை நோக்கிச் சென்­று­விட்டோம். எனது எண்­ணப்­படி எமது பழைய தலை­வர்­களின் காலம் முடிந்­து­விட்­டது. புதிய முறையில் சிந்­திக்கக் கூடிய, மக்­களை இன­மு­ரண்­பா­டு­களில் சிக்­க­வைக்­காத, ஒற்றுமைப்படுத்தக் கூடிய, அன்­புடன் சமூ­கத்தை பார்க்­கின்ற தலை­வர்கள் உரு­வாக வேண்டும்.

மக்கள் அச்­சத்­துடன் வாழ்­கின்­றனர் என்றால் அந்­நாடு எப்­ப­டியும் அபி­வி­ருத்­தியை நோக்கிச் செல்­லாது என்றே நான் நம்­பு­கின்றேன். தாம் விரும்பும் மதத்தை யாராலும் பின்­பற்­ற­மு­டியும். தமது கலா­சா­ரங்­களில் பல மாற்­றங்கள் உள்­ளன. முஸ்­லிம்கள் மாட்­டி­றைச்­சியை சாப்­பி­டுவர். நானும் அதனைச் சாப்­பி­டுவேன். இதனை உண்­ணா­த­வர்களும் இருப்பர். நான் ஒரு இந்து நாட்­டுக்கு சென்று மாட்­டி­றைச்­சியை கேட்­க­மாட்டேன். முஸ்லிம் நாட்­டுக்குச் சென்றால் பன்றி இறைச்சி கேட்க மாட்டேன். என்னால் சாப்­பிட முடி­யு­மா­னதை உண்பேன். எனக்கு அந்த பண்பு இருக்க வேண்டும். மற்­ற­ மக்­களை அங்­கீ­க­ரித்து வாழ வேண்டும். கலா­சா­ரங்­களை மதிக்க வேண்டும். மற்­ற­ மக்களை அங்­கீ­க­ரித்து பிற­ரது உரி­மை­களை மதித்து அனு­ச­ரிக்கும் மனோ நிலை உரு­வாக வேண்டும்.


கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி 'ராவய' பத்­தி­ரி­கையில் பிரசுரமான உங்­க­ளது கட்­டுரை ஒன்றில் 1915, 1958, 1983 காலங்­களில் ஏற்­பட்ட கல­வ­ரத்­துக்கு முன்னர் நில­விய சூழ்­நிலையை ஒத்­த­தா­கவே தற்­போ­தைய நிலையும் உள்­ளது எனக் குறிப்­பிட்­டி­ருந்­தீர்கள். எனவே சமகால ­பி­ரச்­சி­னையும் அத்­த­கைய பாரதூரமான நிலைக்கு நம்மை இட்டுச் செல்­லுமா?


அவ்­வா­றான நிலை ஏற்­படும் என்­றில்லை. ஆனால் எனக்கு அதுபற்றிய பெரி­யதோர் பயம் ஏற்­பட்­டது. 1915 கல­வரம் பற்றி நான் ஆய்வு நோக்கில் பார்த்­துள்ளேன். எனக்­குள்ள பிரச்­சி­னைதான் இந்த கல­வ­ரத்தில் அதிகம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முஸ்­லிம்கள். ஆனால் அதன் போது கைதான சிங்­கள தலைவர்கள் பற்­றியே அதிகம் பேசப்­பட்­டுள்­ளது. மாறாக அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்டோர் பற்­றியே பேசப்­பட்­டி­ருக்க வேண்டும்.

இந்த ஆய்வின் பின்னர் சமூக இயங்­கியல் பற்றி நான் ஒரு முடி­வுக்கு வந்தேன். ஒரு சிறு­பான்மை சமூகம் தாக்­கப்­ப­டும்­போது இன்­னொரு சிறு­பான்மை சமூகம் பெரும்­பான்மை சமூ­கத்­தோடு இணைந்து கொள்­கி­றது. 1958 கல­வ­ரத்தில் நான் இதனைக் கண்டேன். முஸ்­லிம்கள் தமி­ழர்கள் பற்றி சிந்­திக்­க­வில்லை. அதேபோல் 1915 இல் தமி­ழர்கள் முஸ்­லிம்­களைப் பற்றி யோசிக்­க­வில்லை. நமது சமூக இயங்­கி­யலில் இருப்­பது ஒரு சமூகம் தாக்­கப்­ப­டும்­போது ஏனைய அனைத்து சமூ­கமும் ஒரு பக்­கத்­துக்கு இணைந்து விடு­கின்­றனர். இது ஒரு கேவ­ல­மான நிலை. தாக்­கப்­ப­டு­ப­வர்கள் மீதே அனு­தாபம் வர வேண்டும். சில வர­லாற்று எழு­து­கை­களைப் பார்க்­கும்­போது எனக்கு மிகவும் சங்­க­ட­மாக இருந்­தது. நியா­ய­மற்ற முறை­யி­லேயே 1915 ஆம் ஆண்டு கல­வரம் பற்­றிய வர­லாற்று பதி­வுகள் இடம்­பெற்­றுள்­ளன. ஒரு கல­வ­ரத்­தின்­போது சிறைக்குப் போன­வர்­களைத் தான் நாம் வீரர்­களாகக் கரு­து­கின்றோம்.

இவ்­வா­றா­னதோர் நிலை மீண்டும் ஏற்­ப­டக்­ கூடாது. நாம் அனை­வரும் இணைந்து சிறந்­ததோர் சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். 2015 இல் மீண்டும் இன முரண்பாடொன்று ஏற்­படும் என்று நான் நினைக்­க­வில்லை. ஏனெனில் வீணாகக் கத்­து­ப­வர்கள் திருந்­தாவிட்டாலும் கூட அவர்­க­ளுக்கு சார்­பாக அதி­க­மானோர் இல்லை.
அவர்­களை வெறுப்­ப­வர்­களே அதி­க­மா­க­வுள்­ளனர். எல்லா தவ­று­க­ளுக்கும் எமது அரச தலை­வர்­க­ளைத்தான் சாட வேண்டும். அவர்­க­ளது சுய தேவை­க­ளுக்­கா­கவே முஸ்லிம், தமிழ், சிங்­களத் தலை­வர்கள் அனை­வரும் செயற்­ப­டு­கின்­றனர். அஷ்ரப் போன்ற முஸ்லிம் தலை­வர்கள் இருக்க வேண்டும். சோம­ஹா­மு­து­ரு­வோடு தைரி­ய­மாக கதைத்தார். இவ்­வாறு தைரி­ய­மான உண்­மை­யான தலை­வர்கள் தேவை. எமது சமூ­கத்­திலும் இவ்­வா­றான தலை­வர்கள் இல்லை.


1915 ஆம் ஆண்­டு­ க­ல­வ­ரத்தின் போது முஸ்­லிம்­களால் சிங்­க­ள­வர்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­ட­தாக வர­லாற்று எழு­து­கைகள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வி­ட­யத்தில் நீங்கள் உடன்­ப­டு­கின்­றீர்­களா?


நிச்­ச­ய­மாக இல்லை. நான் அதனை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டேன். நாம் பழைய வர­லா­று­களைப் பார்த்­தோ­மே­யானால், வர­லாற்றுக் கட்­ட­மைப்­பு­களின் போது பல்­வே­று­பட்ட இடர்­பா­டுகள் இருக்­கின்­றன. சிங்­கள சமூகம்தான் உலகில் சிரேஷ்­ட­மான சமூகம் என்­று ­க­ரு­து­கின்­றனர். ஆனால் இவ்வாறு கருதுவது தவறு. சிங்­கள சமூகம் மிகவும் தாழ்ந்த சமூகம் என்­ப­தல்ல. தங்­களை உயர்­வா­ன­வர்­க­ளா­கவும் ஏனை­ய­வர்­களை தாழ்­வா­ன­வர்­க­ளா­கவும் கரு­து­வது பிழை­யான விடய­மாகும்.

முஸ்லிம் சமூகம் எப்­போதும் வியா­பா­ர­ ச­மூ­க­மா­கவே இருந்­துள்ளது. எனவே அவர்கள் அதி முன்னேற்றம் கண்டுள்ளனர். சிங்­க­ள­ மற்றும் தமிழ் சமூ­கத்­துக்கு அதன் மீது ஒரு வகை­யா­ன­ கு­ரோத நிலை­ கா­ணப்­பட்டு வந்­தது. இவர்கள் வர­லாற்றில் பெரிதாக வியா­பா­ர­த்­துக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­க­வில்லை, ஆனால் உல­க­ம­ய­மா­தலின் விளை­வாக இவ்­வி­ரு­ ச­மூ­கமும் வியா­பா­ரத்தில் நுழைய வேண்டி ஏற்­பட்­டது. வியா­பா­ரத்­துக்கு வந்த பின்னர் முஸ்­லிம்­களை அடித்­துத் துரத்­த­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.
முஸ்­லிம்­க­ளுடன் முரண்­ப­ட­ வேறு எந்த ஒரு கார­ண­மு­மில்லை. ஒவ்­வொரு சமூ­கத்­துக்கும் தனித்­து­வ­மான ஆற்றல்கள் இருக்­கின்­றன. அவற்றின் மீது பொறாமை கொள்ளக் கூடாது. வேறு ஒரு சமூகம் அத்­த­கைய விட­யத்தில் ஈடு­ப­டு­கின்­றது என்றால் முயற்சித்து அதனுடன் போட்­டி­யிட்டு நாம் முன்னேற வேண்டுமே தவிர அவர்களை தாக்­கி­ ஒருபோரும் முன்னேற முடியாது.


நாட்டில் பலர் ­கடும்போக்குச் செயற்­பா­டுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் அவற்றை கவ­னத்­தி­லெ­டுக்­காது அஸாத் ­ஸா­லியை பயங்­க­ர­வா­த ­தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்தமை தொடர்பில் உங்களது அபிப்­பி­ராயம் என்ன?


இங்­கு ­ந­டக்­கின்ற விட­யங்கள் மிகவும் அசா­தா­ர­ண­மா­ன­வை­யா­கவே இருக்­கின்­றன. அஸாத் ஸாலி கைது செய்­யப்­பட்டால் ஏனை­ய­வர்­களும் கைது செய்­யப்­ப­ட­வேண்டும். சட்டம் என்­பது ஏனைய மனி­தர்­களின் இனம், சமூகம், உரி­மைகள் என்­பனவற்றை பாதிக்­கா­த ­வ­கை­யி­லேயே அதன் செயற்­பா­டுகள் இருக்­க­வேண்டும்

பொது­ப­ல­சே­னா­ அ­மைப்பு பற்றிய உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?


'பண்­ச­லே­விப்­ல­வய' என்று நான் ஒரு புத்­தகம் எழு­தி­யுள்ளேன். அதில் நான் பேச­ வி­ளைந்­தது புத்­த­மதம் விருத்­தி­ய­டைந்து எப்­படி இலங்­கையில் சிங்­கள மத­மாக­ மாறியது என்பதும்  அது ஏற்­ப­டுத்­தி­யுள்ள பிரச்­சி­னைகள் பற்­றி­யதுமாகும். புத்­த­மதம் ஒரு குறிப்­பிட்ட சமூ­கத்­துக்­கு­ரி­ய­தல்ல. புத்­த ­பெ­ருமான் சிங்­க­ளவர் என்று எங்கும் குறிப்­பி­டப்­ப­ட­வு­மில்லை. எமது மத­ நி­லை­யங்­க­ளிலும் மதத்­த­லை­வர்கள் மீதும் அழுக்­குப்­ப­டிந்­துள்­ளது. இது அந்­தக் ­கா­லத்தில் இருந்­துள்ள ஒரு­ வி­டயம். இவ்­வா­றான குழப்­பத்தின் ஒரு­ப­கு­திதான் இது. இவர்­களின் செயற்­பா­டுகள் புத்­த­பெ­ரு­மானின் போத­னை­க­ளுக்கு சற்றும் உடன் பட்­ட­தல்ல. புத்­த­மதம் ஏனைய மதங்­களை அனு­ச­ரிக்கும் ஒரு­ ம­த­மாகும். ஆனால் இலங்­கையில் இந்­நிலை இல்லை.

1915 ஆம் ஆண்­டு­ க­ல­வ­ரத்­துக்கு சிங்­கள வியா­பா­ரிகள் நிதி­ வ­ழங்­கி­ய­தாக உங்கள் கட்­டுரை ஒன்றில் குறிப்­பிட்­டி­ருந்தீர்கள். தற்­போதைய பிரச்சினைகளின் பின்னாலும் அவ்வாறான நிதி உதவிகள் இருக்கும் எனக் கருத இடமுண்டா?
என்னால் அதனை நிரூ­பிக்க முடி­யாது. ஆனால் இது ஒரு வியா­பா­ரப் போட்டியா­கவும் இருக்­கலாம். நோலிமிட் போன்ற முஸ்லிம் கடைகள் தாக்­கப்­பட்­டன. அவை பாரிய வரு­மா­ன­மீட்டு­கின்­றன என்பது உண்மைதான். ஆனால் அதனை ஈடு­செய்யும் வகையில் இன்­னுமோர் வியா­பா­ரியால் போட்­டி­யிட முடி­யும். மாறாக வியா­பா­ர­ போட்­டிக்­காக அவற்றைத் தாக்­கு­வ­து ஒருபோதும் தீர்வாகாது.

இலங்கை முஸ்­லிம்கள் அடிப்­ப­டை­வா­தி­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர் என்று குற்றம்சாட்டுகிறார்களே?
என்­னிடம் அதற்­கான எந்த ஆதா­ரங்­களும் கிடை­யாது. எனவே ஆதா­ரங்கள் இல்­லாமல் இதுவிடயமாக எதுவும் கதைக்­க ­மு­டி­யாது.


அண்­மையில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக புரி­யப்­பட்ட தாக்­கு­தல்கள், எதிர்ப்­புகள் தற்போது சற்­று­க் கு­றைந்­தி­ருந்­தாலும் கூட மீண்டும் அந்­த­ நி­லை­ மே­லோங்கும் சில­ நி­கழ்வுகள் நடக்­கின்­றன. இந்த சூழ்­நிலை தொடர்­வ­தற்­கான வாய்­ப்புள்­ளதா?

முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் மேலோங்கிச் செல்வதானது ஒரு பெ­ரிய பிரச்­சினை. இதற்­கு ­அ­ரசு அனு­மதி கொடுக்­கி­றது என்று நான் கூற­வ­ர­வில்லை. ஆனாலும் அமை­தி­யாக இருப்­பது இதற்கு அனு­ம­தியை கொடுத்­துள்­ளது போல் தோன்­று­கின்­றது. பிற­ருக்கு துன்பம் விளை­விக்கும் அமைப்பு­க­ளுக்கும் சங்­கங்­க­ளுக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். நட­வ­டிக்கை எடுக்­காமல் இருப்­பது பற்றி நாம் சற்று யோசிக்க வேண்டும். இவ்­வாறு நடப்­பதால் அச்­செ­யற்­பா­டு­க­ளுக்கு அர­சு­ சார்­பாக உள்­ளது போன்று தோன்­று­கின்­றது.

அரசு தமது இனம் விளை­யாடும் பைத்­தி­ய­கா­ரத்தனமான செயற்­பா­டு­க­ளுக்கு இடம் கொடுத்­துக் கொண்டிருக்­கின்­றது. இது மிகவும் மோச­மா­ன­நி­லை­யாகும்.


முஸ்லிம் ஊடகங்கள் பற்றிய உங்கள் பார்வை எப்படியிருக்கிறது?

முஸ்­லிம்கள் எவ்­வ­ள­வுதான் தமிழ் பேசி­னாலும் முஸ்­லிம்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்­கு­மி­டையில் ஒரு பாகு­பா­டு உள்­ளது. இரண்டு இனத்­த­வரும் பேசு­வது ஒரு­மொ­ழி­யல்ல, சிந்­த­னைப்­போக்கும் ஒன்­றல்ல. எனவே தனித்­துவ ஊட­க­மொன்­றில்லை என்­பது முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு அசா­தா­ரண நிலைதான். முஸ்­லிம்­க­ளுக்­கான தனித்­துவ ஊட­கத்தை உரு­வாக்­கு­வது நல்­லது. ஆனால் அது இன­வா­த ­நி­லைக்கு சென்றால் அதுவும் அசா­தா­ரண நிலையையே தோற்­று­விக்கும்.

இதற்­கான பெரி­யதோர் திட்டமிடல் வேண்டும். மக்களிடையே குரோதம், பேதம். இனவாதம் என்ப வற்றை தோற்றுவிக்காத வகையில் பிரச்­சி­னை­களின் போது நடுநிலையாக நின்று செயற்­ப­டு­வ­தாக இருக்­க­வேண்டும். இவ்­வா­றான தனித்­து­வ­ங்களுடனேயே உரு­வா­க­ வேண்டும். காலப்­போக்கில் அவை பிழை­யான வழியில் பயன்­ப­டுத்­தப்­படக் கூடாது.


இளம் ஊடகவியலாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த இளம் பரம்பரையினரும் புதிய கோணத்தில் உலகை பார்க்க வேண்டும். இவர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு கூட்டிணைந்த ஜனநாயக சமூகமாக, ஜனநாயக அரசை கட்டிழுப்ப பாடுபட வேண்டும்.


இலங்கையில் ஊடக தர்மம் எந்தளவு பேணப் படுகின்றது?

எப்படி  அரசியல்  கட்சிகள் சாக்கடையாக உள்ளனவோ அதே நிலைக்குதான் ஊடகங்களும் வந்துள்ளன. இத்தகைய இன ரீதியான பிரச்சினைகளுக்கு ஊடகங் களும் பிரதான காரணம். ஊடகங்கள் சமூகத்துக்கு சரி யான செய்திகளை சொல்லுமானால் நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

.
Tags : 'ராவய' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன்

No comments:

Post a Comment